Saturday, October 11, 2008

முதுமையின் வறுமை


முதுமையின் வறுமை

கொடிது கொடிது இளமையில்
வறுமை கொடிது என்று பாடிய அவ்வையே
உனக்கு எப்படி தெரியாமல் போனது முதுமையின் வறுமை
இதோ பார்
அம்பாசமுத்திரத்தில் இருந்து
கண்ணையும் கணவனையும் இழந்த
இந்த முதுகைம்பெண்ணின் வறுமை
தமிழகத்தின் தலைநகர் நோக்கி
ஏய் தமிழகமே உனக்கு மனச்சாட்சி இல்லை ......
இப்படி தவிக்க விட்ட அரசு அலுவலர்களே
நாளை நாமும் முதுமை அடைவோம்
திரும்பிப்பார் ......
எத்தனை முதியோர் இல்லங்கள்
மனச்சாட்சி இல்லா உங்களுக்கு
ஓர் இடம் முன்பதிவு செய்யப்படுகிறது.....



ஒரு இளம் மகளின் தந்தை பாசம்

பெற்ற குழந்தையை பேணிக்காப்பதுதான் பெற்றோரின் கடன். இந்த கடமையில் இருந்து தவறும் பெற்றோரால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கபடுவது என்பது உண்மையே. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த இந்த குடிகார தந்தை அவருடைய ஆசை மகளை அழைத்துக்கொண்டு போதையில் தள்ளாடி தள்ளாடி நாகர்கோவில் நகரில் சென்றார். அவரை பின்தொடர்ந்து இந்த இளம் பிஞ்சு அப்பா! அப்பா! என்று கதறியபடி சென்றாள். அந்த பிஞ்சு குழந்தையை அடிபத்தும் மிரட்டுவதுமாக சென்ற குடிகார தந்தை போதையில் மயங்கி அங்கே இருந்த சாக்கடை ஓரம் விழுந்தான். பாவம் அந்த இளம் தளிருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்பா! அப்பா! என்று தொட்டு தொட்டு மருவியது அப்போது குடிகார தந்தை அவளின் கையை தட்டிவிடுவதும் மிரட்டுவதுமாக இருந்த அவன் திடீரென்று குழந்தையை தூக்கி ரோட்டில் தள்ளிவிட பார்க்கிறான். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவனையும் அந்த குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் இருந்த காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்கள் . காவல்நிலையம் சென்றபின்னரும் அந்த குடிகார தந்தை மயங்கி விழுந்தார். சிறுமி அவரை எழுப்ப முயற்சி செய்ய அது தோல்வியிலேயே முடிகிறது. " குழந்தையை தூங்கவைத்து ஈ, கொசு அண்டாதவாறு அருகில் இருந்து கவனிக்கும் தந்தையை பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே அந்த குழந்தை தந்தையை மொய்த்த ஈ யை விரட்டிய காட்சி கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது".

Friday, October 10, 2008


அம்மா

லேய்! சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்கு போகவேண்டமாடா என்று புஷ்பவதியாம்மா கத்தியவாறு அவன் முகத்தில் தண்ணியை தெளித்தாள். சாமியோ, அம்மா நேற்று நான் உறங்குவதற்கு மூன்று மணியாச்சுமா என்று புலம்பியபடி எழுந்தான். காலையில் ஒரு நாளாவது ஒழுங்கா உறங்கவிடுறிங்களா என்று புலம்பியவாறு வாயில் சிறிது உமிகரியை அள்ளிபோட்டுகொண்டு பல்லை தேய்த்தப்படி தெப்பகுளத்தை நோக்கி குளிபதற்காக சென்றான்.

அடுப்பன்கரைக்கு சென்ற அம்மா காலை சாப்பாடு செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டாள். பக்கத்து ரூமில் தூங்கிய இளையமகன் செல்வன் அம்மா பசிக்குது என்று அழுதவாறு அம்மாவின் கால்களை கட்டிபிடித்துகொண்டான். மாட்டுக்கு புல்லு பறிக்க வயலுக்கு சென்ற மாற்ற குழந்தைகளை நினைத்தவாறு அரிசியை கழுவி பானையில் போட்டுகொண்டிருந்தாள்.

குளிக்க சென்ற சாமியோ வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம் அம்மா பஸ்சுக்கு நேரம்மாச்சு சீக்கிரம் சோறு போடுமா என்று கத்தியவாறு துணி காயபோட்ட இடத்தைநோக்கி சென்றான். அவனுக்கு இருக்கும் ஒரே பாண்டும் துவைத்து போட்டதால் சுருங்கி போய் இருந்தது. அம்மா கொஞ்சம் சுடு சோறு போடுமா என்னோட பாண்டை அயர்ன் பண்ணிடுறேன் என்றான். அம்மாவோ ஒரு தட்டு நிறைய சோறை போட்டு அவனிடம் கொடுக்க அவன் டவலை கைகளில் சுற்றி தட்டின் அடிபாகத்தால் தேய்க்க பாண்டின் சுருக்கமும் நீங்கியது. அம்மா கொண்டுவந்த தேங்காய் துவையலும் உப்பு தண்ணியும் சேர்த்து இருந்த சுடு சோறில் பிசைந்து சாப்பிட்டான். அம்மா நான் போய்கிட்டு வரேன் என்று எட்டு மணி பஸ்ஸை பிடிக்க ஓடினான்.

அதற்குள் மாற்ற குழந்தைகளான திலகன், ஜெயா, குமார் ஆகியோரும் வயலுக்கு சென்று புல்லு அறுத்துவிட்டு வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். அவர்களும் அம்மா பள்ளிக்கூடத்துக்கு போகணும் சாப்பாடு தாம்மா என்று கசங்கி போன சட்டையும் கிழிந்து போன நிக்கரையும் போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் வந்தார்கள். அதற்குள் அம்மா ஒரு பெரிய பத்திரம் நிறைய சோறுவடித்த காஞ்சியில் சிறிது உப்பும், தேங்காயும், வறுத்த உளுந்தும் போட்டு அவர்கள் முன்னால் வைத்தாள். அவர்களும் அமைதியாக கஞ்சியை குடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள்.

காலையில் இருந்தே வீட்டுவேலை செய்துகிட்டு இருந்த அம்மாவுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. மெதுவாக சென்று அடுப்பில் இருந்த சோற்றுபானையை உற்றுபார்த்தாள் அரைபானை சோறு தான் இருந்தது. இப்போது சாப்பிட்டால் ராத்திரிக்கு சோறு பத்தாது என்று நினைத்தவாறு என்றைக்கும் போல் பட்டினியை போக்க தண்ணீர் நிரம்பிய பானையை நோக்கி சென்றாள்....



தமிழில் டைப் செய்ய


View My Stats