Tuesday, December 2, 2008

நானும் ஒருவன்

பொருளாதாரத்திற்காக
உயிராதாரத்தை
மறந்து திரியும்
மன்னிக்க முடியா
மகன்களில்
நானும் ஒருவன்

சோறு போட்டு வளர்த்த
தாயையும் தாய்நாட்டையும்
தவிக்க விட்டுவிட்டு
தரணியை நோக்கி
தாவி வந்திருக்கும்
பாவிகளில்
நானும் ஒருவன்

எங்களின் கனவுகளுக்காக
அவளின் உறக்கம் விற்றவள்
எப்பொழுதும் எந்நொடியும்
எங்களையே எண்ணி
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
எப்போதாவது மட்டுமே
எண்ணிக்கொண்டு வாழ்க்கையை
நொந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்

ஏதேனும் ஒன்று காத்திடுமென
ஏழு பெற்றாள் என் அம்மா
ஏழும் எட்டுத்திசைகளில்
தான் பெறுவதற்காகவும்
தான் பெற்றதற்காகவும்
தன்னை மறந்து
அலைந்து கொண்டிருக்கிறது

அம்மாவென கூப்பிட்டுக்கேட்டதில்லையவள்
அதற்க்கு அவசியமும் வைத்ததில்லையவள்
எந்த ஒரு மொழியும் அறிந்ததில்லையவள்
எங்களின் விழி மொழியைத் தவிர!
உலகமே அறிவாள் அவள் - ஆமாம்
அவள் உலகமே நாங்கள் தானே!

தனிமையான தருணங்களில் மட்டுமே
தாயின் ஞாபகங்கள் எங்களுக்கு
நாங்கள் இல்லாததே
தனிமையாகிப்போனது என் தாய்க்கு

சொந்த மண்
நல்ல நண்பர்கள்
கோவில் திருவிழா
காதல் காமம்
வீடு உறவு
தமிழ் தாயென
சகலத்தையும் தொலைத்து விட்டு- எந்த
சன்மானத்தை தேடி அலைகிறோம்?
சத்தியமாய் தெரியவில்லையெனக்கு
என்ன செய்வது

பணம் பத்தும் செய்யும்- இங்கே
பத்தையும் மறக்க வைக்கிறது
எல்லாத்தையும் மறந்து விட்டு
எனக்கென்ன வேலை இங்கே?
எப்படி குறைக்கலாம் ஞாகப மறதியை
என யோசித்தல் தான்!

இப்படிக்கு
அமெரிக்க டாலர்களில்
அம்மாவை மறந்திருக்கும்
அனேக இளைஞர்களில்
நானும் ஒருவன்



--------------------------------பாலு முத்தையா

4 comments:

Karthick said...

yaaruya nee....
chancea illa...

குடுகுடுப்பை said...

சொந்த மண்
நல்ல நண்பர்கள்
கோவில் திருவிழா
காதல் காமம்
வீடு உறவு
தமிழ் தாயென
சகலத்தையும் தொலைத்து விட்டு- எந்த
சன்மானத்தை தேடி அலைகிறோம்?
சத்தியமாய் தெரியவில்லையெனக்கு
என்ன செய்வது//

அப்படியே என் உணர்வு.

ஆட்காட்டி said...

)))))

Dr. சாரதி said...

Meena, குடுகுடுப்பை, ஆட்காட்டி வருகைக்கு மிக்க நன்றி......

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats