Sunday, November 16, 2008

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில அதிசய குணங்கள்!

1. பாம்புகளுக்கு பொதுவாக ஒரே ஒரு நுரைஈரல் மட்டுமே இருக்கும், அதனுடைய நீளமான உடலினுள் மாற்ற உறுப்புகளுக்கும் இடம் ஒதுக்குவதற்காக இந்த பண்பை பெற்றுள்ளது. (சில பாம்புகளுக்கு இரண்டு இருக்கலாம் மிக சிறிய நுரைஈரல் (left side rudimentary lung) ஒருபக்கம் மிக நீளமான நுரைஈரல் இன்னொரு பக்கம் இருக்கும் (right lung)).


2. Orca or Killer whale எனப்படும் திமிங்கல இனத்தில் ஆண்களைவிட பெண் திமிங்கலங்கள் நீண்டநாள் உயிர்வாழும்.


3. உங்களுக்கு தெரியுமா யானைகள் கடலினுள் நீந்தும் என்பதை. சில நேரங்களில் யானைகள் கடலினுள் சுமார் ஒரு மைல் தூரம் வரை நீந்தியதை கண்டுள்ளனர். யானைகள் கடலில் நீந்துவதை காண இங்கே சொடுக்கவும்.


4. உங்களுக்கு தெரியுமா கோழிகள் தொடர்ந்து 13 விநாடிகள் பறந்ததே உலக சாதனையாகும். 5. நம்முடைய கைரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்குமோ அதுபோல் சிங்கங்களின் நாசித்துவாரம் அமைந்துள்ள Muzzle பகுதியும் நீண்ட முடிகளை கொண்ட மீசை பகுதி whiskers-ம் ஒவ்வொரு சிங்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கும்.

6. பன்றிகள் orgasam என்னும் உச்சநிலையை அடைய சுமார் 1/2 மணிநேரம் ஆகும். பன்றிகளின் ஆண் உறுப்பு சற்று வித்தியாசமாக corkscrew மாதிரியே இருக்கும்.

7. பன்றிகளால் தலையை தூக்கி ஆகாயத்தை பார்க்க முடியாது.

8. பென்குயின்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் sex வைத்து கொள்ளும்.
9. தங்க மீன்களின் நியாபகசக்தி மூன்று விநாடிகள் மட்டுமே.


10. உங்களுக்கு தெரியுமா Ant Lion இவை எறும்புகளும் இல்லை சிங்கங்கமும் இல்லை இவை ஒரு வகையான பூச்சியினம். (கிராமங்களில் வீட்டின் ஓரத்தில் காணப்படும்)

11. Male gypsy moth எனப்படும் பழபூச்சி இனத்தில் ஆண் பூச்சிகள் பெண் பூச்சியினை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூர தொலைவிலே smell மூலம் கண்டுபிடித்துவிடும். 12. Flamingo என்னும் பறவை தனது தலையை கீழே குனிந்து கொண்டால் மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.

13. டால்மேசன் நாய்கள் பிறக்கும் பொது உடலில் புள்ளிகள் இருக்காது. பிறந்து சுமார் நான்கைந்து நாட்களுக்கு பிறகே உடலில் கரும்புள்ளிகள் உருவாகும்.



5 comments:

Anonymous said...

anna ungal pathivu ellam miss pannama padichiruven.athoda neenga ovoru thakavalukum athu samanthappatta padam podurathu romba purinchukira mathiriyum therinchukira mathiriyum irukum sir. neengal melum valara ellorudaya paratukal peravendum ena nan mana mara valthukiren. nantri....

Dr. சாரதி said...

kilukku and Anonymous வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஆயிரம்......

நந்து f/o நிலா said...

Ant Lion இதை குல்லா பூச்சி என்போம்.சிறு வயதில் இதன் குழிக்குள் எறும்பை பிடித்து விட்டு அதை பிடிக்கவரும் இந்த பூச்சியை பிடிப்போம்

அப்படி பிடித்த சுமார் 25 குல்லா பூச்சிகளை 2X2 அடி பலகை பதித்து நடுவில் மணல் போட்டு வளர்த்தது, அதற்கு சாப்பாடு என்னவென தெரியாமல் சர்க்கரை,வேர்கடலை பக்கத்தில் வைத்து எரும்பை வர வைத்து குழிக்குள் விழவைப்பது... என்று என்னை நல்லா பழைய ஞாபகங்களை கிளர வைத்து விட்டீர்கள்

Dr. சாரதி said...

நந்து f/o நிலா, நீங்கள் சொன்னபிறகுதான் எனக்கும் சிறுவயதில் இது போன்று விளையாடிய விளையாட்டுகள் நியாபகம் வருகிறது......வருகைக்கு நன்றி....

ambedkar said...

given information is very good for our life.really i learn lot of things in this page.
thank you

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats