Tuesday, November 25, 2008

தமிழகத்தில் மிக மலிவான பொருள்: மனித உயிர்கள்தான்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த அரியப்பபுரத்தை சேர்ந்த பெரியசாமியின் மனைவி சிவக்கொழுந்துக்கு (வயது 26) இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தை 3 வயது முத்துலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக பஸ்சில் அழைத்துசென்றார். நட்டார்பட்டி செல்லும் தனியார் மினி பஸ்சின் உள்பகுதியில் டயருக்கு மேல் உள்ள சீட்டில் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார்.

பஸ் இருக்கும் லட்ச்சணம்........

அப்போது பஸ் திடீரென பிரேக் போட்டதில் டயருக்கு மேல்பகுதி தகரம் உடைந்து சிவக்கொழுந்து, குழந்தையுடன் பஸ்சுக்கு அடியில் விழுந்தார். பஸ் டயர் ஏறியதில் சிவக்கொழுந்து இறந்தார். அவருடன் கீழே விழுந்த குழந்தை முத்துலட்சுமி லேசான காயங்களுடன் உயிர்தப்பியது. சிவக்கொழுந்து 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்பிணியின் வயற்றில் இருந்த அந்த நான்கு மாத குழந்தையும் இவ்வுலகை காண முடியாமல் அழிக்கப்படாது.

(நன்றி: தினத்தந்தி, தினமலர்)

1 comment:

Anonymous said...

yo.. neengellam enada vandi otturinga bus edukurathuku munnadi oruthadava paakirathilaya..ungalal 2 uyir intha ulagatha vittu poitte.ipdiyana bus vachurukiravanga ellam bus ottave kudathu.... apdinnu oru sattam kondu varanum indiavula.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats