Saturday, November 29, 2008

ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன் :நாங்கெல்லாம் கணக்குல புலியாக்கும்....

1. இந்த கணக்கு சரிதானா மக்களே?
2.எனக்கு Trigonometry எல்லாம் மறந்து போச்சு? சரிதான என்று பார்த்து சொல்லுங்களேன்?


3. Example -ஐ அப்படியே try பண்ணிட்டேன், கணக்கு சரிதானே?
4. விரிவாக எழுத சொன்னாங்க ரெம்ப விரிவா எழுதிட்டனோ?
algebra கொஞ்சம் மறந்து போச்சு அதுதான் இப்படி ஆயிடிச்சு.


5.ரெம்ப easy யான கேள்விய கேட்டு இருக்காங்க, கண்ணு முன்னாலேயே X இருக்கு இதை எங்களால கண்டுபிடிக்க முடியாதாக்கும்.....நாங்களெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும் 6.இந்த கணக்கை சரியாதானே செஞ்சிருக்கேன் ஏன் முட்டை மார்க் போட்டிருக்காங்க?


அறிவோமா அறிவியல்: டால்பின்கள் சில உண்மைகள்!

டால்பின்கள் வவ்வால்கள் போன்றே எக்கோ (echolocation) மூலம், அதாவது எதிரே இருக்கும் பொருள் மேல் பட்டு வரும் எதிரொலியை பயன்படுத்தியே உணவை கண்டுபிடிக்கவும், இடம் பெயர்ந்து செல்கிறது.

பொதுவாக டால்பின்களின் உணவு மீன்களும், கணவாய்களும்தான் (squid), இவை கூட்டமாக சென்றுதான் வேட்டையாடும்.


டால்பின்கள் தூங்கும் பொது ஒரு கண்ணை திறந்து வைத்துதான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும். இடதுகண் திறந்து இருந்தால் வலது பக்க மூளை வேலை செய்யும். தூங்கும் பொது மிக மெதுவாகவே நீந்தும்.


டால்பின்கள் பற்கள் இரையை பிடிக்க மட்டுமே பயன்படுத்தும். உண்ணும் பொது அப்படியே விழுங்கிவிடும்.


டால்பின்களில் சுமார் 40 வகையான இனங்கள் உள்ளன, இதில் பெரும்பான்மையான டால்பின்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

வளைந்த முக அமைப்பை உடைய "bottlenose" டால்பின்களை பார்ப்பதற்கு சிரித்து கொண்டிருப்பதபோன்று தோற்றம் அளிக்கும்.


கூரான உடல் அமைப்பை பெற்றிருப்பதால் மிகவேகமாக நீந்தும் திறனுடையது. அதாவது மணிக்கு சுமார் 41 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நீந்தும்.

சுமார் 12 -18 மாதங்கள் வரை குட்டிகளுக்கு பால் ஊட்டும்.


உங்களுக்கு தெரியுமா தண்ணீரின் அடியில் டால்பின் குட்டிகள் நீர்க்குமிழி உண்டாக்கி விளையாடும் என்பது.


டால்பின்கள் blowhole மூலமாகவே சுவாசிக்கும், இதன் மேல் காணப்படும் blowhole-லில் திறந்து மூடும் அமைப்பு காணப்படும்.

closed blowhole

Opened blowhole

தண்ணீரின் மேலே சுமார் 20 அடிகள் வரை துள்ளி குதிக்கும் திறனுடையது.


பிரேசில் நாட்டில் உள்ள சின்ன மீன்பிடி நகரமான Laguna-இல் உள்ள மீனவர்கள் டால்பின்களை பிடிப்பதற்கு சிறிய மீன்களை வலையில் கட்டிவிடுவார்கள் இத்தனை உண்ண வரும் டால்பின்கள் வலையில் மாட்டிவிடும். சிலவருடங்கள் கழித்து டால்பின்கள் நன்கு பழகிவிட்டது அதாவது வலையில் கட்டிய மீன்கள் கரையை நோக்கியே அசைந்தாடும், இப்படி கண்டுபிடித்தபின் இவை வலை இருக்கும் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. சிலநேரங்களில் எத்தனும் ஒரு டால்பின் இது போன்று பொய் மீன்களை கண்டால் உடனடியாக எல்லா டால்பின்களுக்கும் தகவல் சொல்லிவிடும். அதிசயமான ஒரு நிகழ்வுதான்.


சீனா மற்றும் தென் அமேரிக்காவில் காணப்படும் நன்நீரில் வாழ் டால்பின்கள் அழியும் தருவாயில் உள்ளது.



Friday, November 28, 2008

மும்பை: தீவிரவாதி தாக்குதல் முடிவிற்கு வந்தது

தாஜ் மஹால் ஹோட்டெலில் இறுதியாக இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லபட்டத்தின் விளைவாக 60 மணிநேரம் நடைப்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல் முடிவிற்கு வந்தது.


தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கிய தேசிய பாதுகாப்பு படையினருக்கு (NSF) நாமுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வோம்.


இப்போராட்டத்தில் இன்னுயிர் நீத்த காவல் துறைனருக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நம்முடைய கண்ணீரினை காணிக்கையாக்குவோம்.

Hemant Karkare



இத்தாக்குதலில் இன்னுயிரை இழந்த 200 மேற்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினர்க்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.




Thursday, November 27, 2008

அறிவோமா அறிவியல்: தவளைகள் சில வினோதங்கள்!

"Ornate horned frog" அர்ஜென்டினாவில் காணப்படும் இந்த தவளைகள் ஒரு சுண்டலியை அப்படியே விழுங்கும் திறனுடையது.



தவளைகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் இல்லை இதன் தோல்கள் மூலமாக தண்ணீரை உறிந்து கொள்ளும்.



"Spring peeper" தவளையின் உடல் உறுப்புகளில் சுமார் 65 சதவீதம் குளிகாலங்களில் பனியால் உறைந்துவிடும்

"Fire-bellied toad" இதன் வயிற்று பகுதியில் காணப்படும் சிவப்பு நிறம் எதிரிகளை பயமுறுத்தவும், உடலில் விஷம் உள்ளது என்பதையும் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
"Brazilian baby frog" தான் உலகின் மிக சிறிய தவளையாகும்.

"Toad-fish" தண்ணீருக்குள் உடல்லுறவு கொள்ளும் பொது ஏற்படுத்தும் சத்தம் கரையில் நிற்கும் நமக்கு கேட்க்கும்.


"African clawed frog" இதன் உடலில் சுரக்கும் ஒரு விதமான வேதிப்பொருள் நோயை உண்டுபண்ணும் நுண் உயிரினங்களை கொல்லும் திறனுடையது.


தேரைகளால் (Toad) தவளையை (Frog) போல் துள்ளி குதிக்க முடியாது.

Toad

Frog

"Horned Toad" இந்த தவளைகள் எதிரியை பயமுறுத்த கண்களில் இருந்து இரத்தத்தை பீச்சியடிக்கும்.



சிலதவளைகள் (Wood frogs) குளிர் காலத்தில் பனியுள் உறைந்துவிடும் வெயில் காலம் தொடங்கி பனி உருகியதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இதன் தோலானது உடலினுள் இருக்கும் உறுப்புகளை பனியில் உறயவிடாமல் தவிக்கும் வண்ணம் பலம் வாய்ந்தது.


உலகின் மிக பெரிய தவளையினம் "Goliath frog" தான். சுமார் மூன்று கிலோ எடை வரை வளரும்.
ஆப்ரிக்காவில் காணப்படும் Bee Frog தேனீக்களை விட சிறியதாகத்தான் இருக்கும்.


நன்கு வளர்ந்த "Gold Frog"
1 cm உயரமே இருக்கும்.


Wednesday, November 26, 2008


ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன்......

ஆம்பிளைங்க எப்பவுமே இப்படித்தான்.....



கொஞ்சம் கணிப்பு தவறிடிச்சு ...ஹி...ஹி...ஹி....



பைக்ல போனவனுக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான்....



நல்ல
மாத்துறாங்கப்பு......



அது எப்படிங்க மூணாவது கை வந்தது?


Tuesday, November 25, 2008

தமிழகத்தில் மிக மலிவான பொருள்: மனித உயிர்கள்தான்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த அரியப்பபுரத்தை சேர்ந்த பெரியசாமியின் மனைவி சிவக்கொழுந்துக்கு (வயது 26) இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தை 3 வயது முத்துலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக பஸ்சில் அழைத்துசென்றார். நட்டார்பட்டி செல்லும் தனியார் மினி பஸ்சின் உள்பகுதியில் டயருக்கு மேல் உள்ள சீட்டில் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார்.

பஸ் இருக்கும் லட்ச்சணம்........

அப்போது பஸ் திடீரென பிரேக் போட்டதில் டயருக்கு மேல்பகுதி தகரம் உடைந்து சிவக்கொழுந்து, குழந்தையுடன் பஸ்சுக்கு அடியில் விழுந்தார். பஸ் டயர் ஏறியதில் சிவக்கொழுந்து இறந்தார். அவருடன் கீழே விழுந்த குழந்தை முத்துலட்சுமி லேசான காயங்களுடன் உயிர்தப்பியது. சிவக்கொழுந்து 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்பிணியின் வயற்றில் இருந்த அந்த நான்கு மாத குழந்தையும் இவ்வுலகை காண முடியாமல் அழிக்கப்படாது.

(நன்றி: தினத்தந்தி, தினமலர்)
அறிவோமா அறிவியல்: விலங்கு கூட்டங்கள்!

ஒவ்வெரு விலங்கின கூடங்களுக்கும் ஒவ்வெரு விதமான பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அதனை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மீன்களின் கூட்டத்தின் பெயர் "Draft, Nest, Shoal, School"


நண்டுகளின் கூட்டத்தின் பெயர் "Cast"


நாக பாம்புகளின் கூட்டத்தின் பெயர் "Quiver"


கோழிகளின் கூட்டத்தின் பெயர் "Brood" "Peep"



சிறுத்தைகளின் கூட்டத்தின் பெயர் "Coalition"



காளை மாடுகளின் கூட்டத்தின் பெயர் "Drove"



ஆந்தைகளின் கூட்டத்தின் பெயர் " Parliament"


வாத்துகளின் (Geese) கூட்டத்தின் பெயர் " Gaggle"



திமிங்கில கூட்டத்தின் பெயர் "Pod"



கங்காரு கூட்டத்தின் பெயர் "Mob"


காண்டாமிருகங்களின் கூட்டத்தின் பெயர் "Crash"


தவளை கூட்டங்களின் பெயர் "Army"



பன்னிரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட பசுக்கள் உள்ள கூட்டத்தின் பெயர் "Flink" "Kine"


Monday, November 24, 2008

தெரிந்து கொள்வோமா: உலகின் மிகப்பெரிய .......

உலகின் மிக பெரிய மண் வெட்டும் இயந்திரம் (Excavator) ஜெர்மனியில் உள்ளது. இதன் எடை சுமார் 45,500 டன்கள், உயரம் 95 மீட்டர்கள் அகலம் 215 மீட்டர்கள்.



உலகின் மிக பெரிய விளையாட்டு மைதானம் பிரேசில் நாட்டில் உள்ள MARACANA STADIUM தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 1,99,000 பார்வையாளர்கள் அமரலாம்.


உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள Burj Dubai தான். இதன் உயரம் சுமார் 900 மீட்டர்கள்.


உலகின் மிக உயரமான சிலை பிரசிலில் உள்ள CHRIST THE REDEEMER STATUE தான்.
உலகின் மிக பெரிய பயணிகள் பஸ் Neoplan Jumbo -cruiser தான் இரண்டு அடுக்கு கொண்ட இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 175 பயணிகள் பயணிக்கலாம்.



உலகின் மிக பெரிய பயணிகள் விமானம் Airbus A380 தான். இதில் ஒரே நேரத்தில் சுமார் 555 பயணிகள் பயணிக்கலாம்



உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல் MS Freedom of the Seas தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 4300 பயணிகள் பயணிக்கலாம்.

கப்பலின் 5 தளத்தின் ஒரு பகுதி.....

உலகின் மிக நீளமான பாலம் சீனாவின் Donghai Bridge தான் இதன் நீளம் சுமார் 32.5 கிலோ மீட்டர்கள்.


உலகின் மிக அகலமான பாலம் ஆஸ்திரேலியாவின் Sydney Harbour Bridge தான். மொத்தம் 16 lanes of car traffic.....8 lanes in the upper floor, 8 in the lower floor அமைந்துள்ளது.

உலகின் மிக பெரிய விமான நிலையம் அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி (JFK) New York விமான நிலையம் தான்.



உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால் (Shopping mall) சீனாவின் சாங்காய் நகரில் அமைந்துள்ளது இது ஆறு அடுக்கு கட்டிடம் சுமார் 892,000 meter-square அளவுடையது .



உலகின் மிகப்பெரிய அலுவலகம் (office complex) Merchandise Mart அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ளது.



உலகின் மிகப்பெரிய Indoor நீச்சல் குளம் கனடாவின் Edmonton நகரில் அமைந்துள்ளது. இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடையது.


Sunday, November 23, 2008

நாங்கெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும்....

25/5=14 என்பது சரியா....சரியென்று ஒரு தம்பதியினர் பண்ணும் லொள்ளை கண்டு மகிழ ......கண்டிப்பா முழு வீடியோ வையும் காணுங்கள்.

(சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போகும்....)





Saturday, November 22, 2008

அறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது உறுப்புகள்! (Part-1)

மனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, அதனை இப்பகுதியில் காண்போம்.

1.
ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.


2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.

3.
PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.

4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.


5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.

6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.


7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.


8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.


9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.


10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.


Friday, November 21, 2008

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!

இறைவனின் படிப்பின் ஒவ்வொரு விலங்கினதிர்க்கும் இவ்வுலகில் பிற எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொண்டு வாழ்வதற்கும் உணவு தேடிகொள்வதர்க்கும் சில விசேஷ பண்புகள் இருக்கும் அதில் முக்கியமான ஒன்றுதான் மிமிக்கிரி.

மடகாஸ்கர் நாட்டின் காடுகளில் காணப்படும் Paradoxophyla palmata தவளைகளின் உடலின் நிறம் அதுவாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்.இதன் மூலம் எதிரிகளிடம் இருந்தும், தனக்கு தேவையான உணவினை மறைந்திருந்தும் பிடித்துக்கொள்ளும்.


Papua New Guinea கடலில் காணப்படும் tartan hawk மீன்களின் உடலின் நிறம் அது வாழும் பவள பாறைகளின் நிறத்தை ஒட்டி இருப்பதால் எளிதில் எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொள்ளும்.


Hawk Moth பழபூச்சியின் Caterpillar பார்ப்பதற்கு பாம்பு போலவே காட்சியளிக்கும் எனவே எதிரிகள் இத்தனை கண்டவுடன் பயந்து பக்கத்தில் கூட செல்லாது.

Hawk moth

பாம்புகளின் மிமிக்கிரி, சில விஷம் இல்லாத பாம்புகள் கொடிய விஷமுடைய பாம்பின் நிறத்தினை பெற்று இருக்கும். வலது புறம் காணப்படும் Sinaloan milk பாம்பிற்கு விஷம் கிடையாது ஆனால் இடது புறம் காணப்படும் Coral பாம்பு கொடிய விஷம் உடையது. சில பாம்புகளை உண்ணும் பறவைகள் விஷம் இல்லாத Sinaloan milk பாம்பை பார்த்தாலும் விஷம் உடையது என்று எண்ணி அதனை விடுவிட்டு சென்றுவிடும்.


Coral snake ........ Sinaloan milk snake


விசமில்லாத Lycodon Travancoricus

கொடிய விஷமுடைய கட்டுவிரியன்....

சில விலங்கினங்கள் எதிரிகளை ஏமாற்றுவதற்காக தலை பகுதியையும் வால் பகுதியையும் ஒரே மாதிரியாக பெற்று இருக்கும். எதிரிகளால் வால் எது தலை எது என புரியாமல் குழம்பி பயந்து போய்விடும்.
உங்களுக்கே குழப்பமாக இருக்கிறதா...மேல் பகுதிதான் தலை....

சில பூச்சிகளின் மிமிக்கிரி இலைகளின் நிறத்தையோ அல்லது சருகுகளின் நிறத்தையோ பெற்று இருக்கும்.



ஒட்டகமும் ஒரு பக்கெட் தண்ணீரும்.....



















Thursday, November 20, 2008

உலகின் மிக அதிர்ஷ்டமான கார் டிரைவர்

1...



2....



3....
(பெரிதுபடுத்தி பார்க்கவும்)
விலங்குகள் சில வினோதங்கள்!

சீ......அசிங்கம்......
Relax பண்ணும் கங்காரு

தாயும் சேயும்....

தாயும் சேயும்....


வண்ண மீன்கள்.....

தாயும் சேயும்

குறும்பு செய்யும் குரங்கு குட்டி.....

பனியில் உறங்கும் துருவகரடி...
நரிகுட்டிகள்.....

Cute விலங்குகள்

கண்ணாடி பார்க்கும் வரிக்குதிரைகள்.....

குட்டி தேவாங்குகள்

டீ கடை பெஞ்ச்

கோக் குடிக்கும் ஒட்டகம்

ஒற்றுமையுள்ள விலங்குகள்

தோழ்கொடுத்து உதவும் நாய் நண்பன்

கேரட் தின்னும் எலி

புல் தின்னும் நத்தை...

ஒற்றுமையுடன் முயல், எலி, பூனை மற்றும் நாய் குட்டி.

நாயும் வாத்து குஞ்சுகளும்

எலியை பிடிக்க திட்டம் போடும் பூனைகள்

Cute எலி

வேட்டை நாய்களும் பூனையும்...

சர்க்கஸ் விலங்கு சாகசம்


சாகசம் செய்யும் தவளை...
அழகான முள்ளம்பன்றி குட்டிகள்
சிரிக்கும் குதிரை........

சாலையை கடக்கும் எல்க் (Elk) மான்கள்

நின்று கொண்டே தூங்கும் ஆடு

தீவிரவாதி குரங்கு....

புகைபிடிக்கும் பறவை....


ஆய் போகும் யானை....


முத்தமிடும் ஒட்டகசிவிங்கி


திருடும் நரி
துருவகரடிகள்
இரையை பிடிக்கும் நாகம்....

பெரிதாக்கி பார்க்கவும்.....

வெந்நீரில் குளிக்கும் மான்கள்..


உறை பனியுள் சீல்....
கத்தும் குரங்கு.....
கொட்டாவி விடும் கோவேறு கழுதை....
தொட்டுவிட்டது அணில்
போஸ் கொடுக்கும் அணில்
அமர்ந்திருக்கும் எலி
பெர்பெக்ட் மேட்ச் ஆட்டுக்குட்டி
மாட்டிக்கொண்ட சுண்டெலி
காதலை வெளிப்படுத்தும் குரங்குகள்
பொறியில் மாட்டிக்கொண்ட எலிகள்
பூனை குட்டிக்கு உதவிசெய்யும் நாய்கள்.

Wednesday, November 19, 2008

அதிபயங்கர மலைபாம்பு வேட்டை

ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைபாம்புகளை (African rock pythons) எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.

African rock pythons

இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலை பாம்புகள் ஆகும், இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரணமாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும் முறையே வித்யாசமாக இருக்கிறது.

பாம்பு வேட்டைக்கு தயாராகிறார்கள்

மலைப்பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான். மலைப்பாம்பு இருக்கும் வளையினை கண்டிபிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக்கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் அந்த வளைனுள் செல்லுவான்


முட்டையிட்டு அடைகாக்கும் மலைப்பாம்பு எப்பொழுதும் மிக கோபமாகவே இருக்கும். திறமையான மனிதன் மிக வேகம்மாக வெளியே வந்துவிடுவான்.... தவறினால் தலை பாம்பின் வாயினுள் தான்.

ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள் ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டியாக பிடித்து அதனை சம்மாளித்துவிடுவார்கள். கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகளின் முகத்தினை நோக்கி வராதவாறு முகத்தின் முன் பிடித்து கொள்வார்கள். அதையும் மீறி பாம்பு கவ்விவிட்டல் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலைபிடித்து வெளியே இழுத்துவிடுவான்.

இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

இறுதியில் இப்படித்தான் மாற்றபட்டு விற்பனை செய்யப்படுகிறது.


ஒருவேளை இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிரினகளும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமோ?

Tuesday, November 18, 2008

குடி குடியை கெடுக்கும்.......நிஜமா!


நாமாவது பேசி இலங்கை பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுப்போம் அண்ணாச்சி......

யாருபெத்த புள்ளையோ!

இது நல்ல இருக்கே ...

நல்ல கெளப்புறாங்கையா பீதிய.....


நாங்கல்லாம் தண்ணியடிக்க ஆரம்பிச்சா ......
பயப்படாத மக்கா சும்மா தமாசுக்கு......

நான்தான் வெள்ளக்காரன்.....

சீ.....என்ன கொடுமை சரவணா..........

ப்ளீஸ் யாரும் சத்தம் போடாதிங்க ...நான் தியானம் பண்ணுறேன்

என்னோட டிரஸ் நல்ல இருக்கா....

எனக்கு என்னும் ரெண்டு பாட்டில் வேணும்....

Hybrid...........

அறிவோமா அறிவியல்: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள் (Part-2)

இந்தவருடம் கணகிடபட்ட 45,000 விலங்கினங்களில் சுமார் 38 சதவிதம் விலங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சர்வதேச சமுதாயம் இதை தடுக்க முயற்ச்சிக்கவில்லை எனில் நம் வரும்கால சந்ததியினர் போட்டவில்தான் விலங்கினகளை பார்க்கமுடியும்.

1. Pere David's deer: சீனாவை தாயகமாக கொண்ட இந்த மானினமும் அழியும் தருவாயில் உள்ளது.


2. Tasmanian Devi: ஆஸ்திரேலியாவின் காணப்படும் இந்த விலங்கினம் கடந்த பத்து வருடத்தில் சுமார் 60 சதவீதம் அழிந்துவிட்டது. இந்த விலங்கினம் அழிய முக்கிய காரணம் நோய் தாக்குதல்களும், கான்சர் போன்ற நோய்களும் தான்.

(Tasmanian Devil Facial Tumour Disease)

3. Cuban Crocodile: க்யுபா நாட்டில் வாழும் நன்னீர் முதலைகள் தான் இவை. கடந்த பத்து வருடத்தில் சுமார் 80 சதவீதம் அழிந்துபோய்விட்டது.


4. Caspian Seal: ஐரோப்பாவில் அழிந்து கொண்டிருக்கும் இந்த சீல் இனம் ஒரு காலத்தில் சுமார் 10,00,000 காணபட்டது ஆனால் கடந்த நூறு வருடங்களில் சுமார் 90 சதவீதம் அழிந்து போய்விட்டது. சுற்றுப்புற சீர்கேடு, நோய் தாக்குதல், மீன் வலையில் தெரியாமல் மாட்டி இறந்து போவதால் தான் அழிந்து கொண்டு இருக்கிறது.


5. Fishing Cat: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த பூனையினம் நீரில் நீந்தி மீன் பிடித்து உண்ணுவதில் கெட்டி. தற்பொழுது சதுப்புநில காடுகள் அழிக்கபடுவதாலும்,சுற்றுப்புற சீர்கேடு, நோய் தாக்குதல் போன்றவற்றால் அழிந்து கொண்டு இருக்கிறது.

6. Grey-Faced Sengi: தான்சானியாவில் காணப்படும் இந்த விலங்கினமும் அழியும் தருவாயில்தான் உள்ளது. காடுகள் அளிக்கபடுவதால் தான் முக்கியமாக இந்த இனம் அழிந்து கொண்டு வருகிறது.


7. Purple Marsh Crab: மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் இந்த நண்டினம் வறண்ட காலநிலைகளில் களிமண் வளைகளில் வாழும். இவை தான் first living specimens of these semiterrestrial air-breathers.


8. Rameshwaram Parachute Spider: ஆமாங்க நம்ம ராமேஸ்வரம் தான். தற்பொழுது சுமார் 500 சிலந்திகள் தான் உயிர் வாழ்வதாக கணக்கிடபட்டுள்ளது.


9. Holdridge's Toad: கோஸ்ட்டா ரிக்காவில் காணப்படும் இந்த தேரைகள் அழியும் தருவாயில் இருக்கிறது.


10. Right Whale: சுமார் 60 டன் எடையும் 60 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த திமிங்கலம் தான் அதிகமாக வேட்டையாடி அளிக்கப்பட இனமாகும். தற்பொழுது சுமார் 250 தான் உள்ளது. தற்பொழுது இத்தனை காப்பதற்காக புதிய சட்டம் இயற்றபட்டுள்ளது.


இத்தனையும் அழித்த மனிதா....நீ யாரைத்தான் வாழ வைக்கபோகிறாய்?.........

Monday, November 17, 2008

உங்களுக்கு தெரியுமா: இரண்டுதலை நாகம்!

இந்த இரண்டு தலை நாகம் ஸ்பெயின் நாட்டில் உள்ள Alicante என்னும் கிராமத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்று இரண்டுதலை நாகங்கள் உயிர் வாழ்வது அரிதே. ஏனென்றால் உணவு உட்கொள்ளும் போது இரண்டு தலைகளுக்கிடையே சண்டை ஏற்படும். ஒரு தலை நான் தான் உணவை உட்கொள்வேன் என்றும் மற்றொரு தலை நான் தான் உணவு உட்கொள்வேன் என்று சண்டையிட்டு கொண்டு இறந்துவிடும்.
இரண்டு தலைகளும் சண்டையிடுவதை காண இங்கே சொடுக்கவும்.

எந்த பக்கம் போவது என்பதிலும் அவைக்குள் குழப்பம் ஏற்படும்.


இது போன்று மிக சில பாம்புகளை அமெரிக்காவிலும், இலங்கையிலும், அர்ஜென்டினாவிலும், கண்டுபிடித்துள்ளனர்.




Sunday, November 16, 2008

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில அதிசய குணங்கள்!

1. பாம்புகளுக்கு பொதுவாக ஒரே ஒரு நுரைஈரல் மட்டுமே இருக்கும், அதனுடைய நீளமான உடலினுள் மாற்ற உறுப்புகளுக்கும் இடம் ஒதுக்குவதற்காக இந்த பண்பை பெற்றுள்ளது. (சில பாம்புகளுக்கு இரண்டு இருக்கலாம் மிக சிறிய நுரைஈரல் (left side rudimentary lung) ஒருபக்கம் மிக நீளமான நுரைஈரல் இன்னொரு பக்கம் இருக்கும் (right lung)).


2. Orca or Killer whale எனப்படும் திமிங்கல இனத்தில் ஆண்களைவிட பெண் திமிங்கலங்கள் நீண்டநாள் உயிர்வாழும்.


3. உங்களுக்கு தெரியுமா யானைகள் கடலினுள் நீந்தும் என்பதை. சில நேரங்களில் யானைகள் கடலினுள் சுமார் ஒரு மைல் தூரம் வரை நீந்தியதை கண்டுள்ளனர். யானைகள் கடலில் நீந்துவதை காண இங்கே சொடுக்கவும்.


4. உங்களுக்கு தெரியுமா கோழிகள் தொடர்ந்து 13 விநாடிகள் பறந்ததே உலக சாதனையாகும். 5. நம்முடைய கைரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்குமோ அதுபோல் சிங்கங்களின் நாசித்துவாரம் அமைந்துள்ள Muzzle பகுதியும் நீண்ட முடிகளை கொண்ட மீசை பகுதி whiskers-ம் ஒவ்வொரு சிங்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கும்.

6. பன்றிகள் orgasam என்னும் உச்சநிலையை அடைய சுமார் 1/2 மணிநேரம் ஆகும். பன்றிகளின் ஆண் உறுப்பு சற்று வித்தியாசமாக corkscrew மாதிரியே இருக்கும்.

7. பன்றிகளால் தலையை தூக்கி ஆகாயத்தை பார்க்க முடியாது.

8. பென்குயின்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் sex வைத்து கொள்ளும்.
9. தங்க மீன்களின் நியாபகசக்தி மூன்று விநாடிகள் மட்டுமே.


10. உங்களுக்கு தெரியுமா Ant Lion இவை எறும்புகளும் இல்லை சிங்கங்கமும் இல்லை இவை ஒரு வகையான பூச்சியினம். (கிராமங்களில் வீட்டின் ஓரத்தில் காணப்படும்)

11. Male gypsy moth எனப்படும் பழபூச்சி இனத்தில் ஆண் பூச்சிகள் பெண் பூச்சியினை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூர தொலைவிலே smell மூலம் கண்டுபிடித்துவிடும். 12. Flamingo என்னும் பறவை தனது தலையை கீழே குனிந்து கொண்டால் மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.

13. டால்மேசன் நாய்கள் பிறக்கும் பொது உடலில் புள்ளிகள் இருக்காது. பிறந்து சுமார் நான்கைந்து நாட்களுக்கு பிறகே உடலில் கரும்புள்ளிகள் உருவாகும்.



Saturday, November 15, 2008

கோபுரம் வாங்கலையோ கோபுரம்......



கனடா நாட்டின் டோரண்டோ நகரின் மைய்யத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான CN tower யை நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிசுமையின் காரணமாக விற்பனை செய்துவிட கனடா நாட்டு நிதித்துறை அமைச்சர் Jim Flaherty முடிவு செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட இந்த டவரின் அப்போதைய மதிப்பு சுமார் 65 மில்லியன் டாலர்கள், இதன் உயரம் சுமார் 553 மீட்டர்கள். இது கனடா நாட்டின் அரசாங்கத்தின் சொத்தாகும். இத்தனை விற்பதின் மூலம் பெறப்படும் பணத்தின் மூலம் ஓரளவு பொருளாதாரத்தை சரிசெய்யப்படும் என நம்பப்படுகிறது. இதன் விலை 820 மில்லியன் அமெரிக்கன் டாலர்தான்.


நம்ம ஊருல யாரவது இருந்த சொல்லுங்க வித்துடலாம்.


ஆட்டோக்காரரின் அசத்தல்!


சென்னையிலிருந்து ரயிலில் கோவை சென்ற பெண் கோவையை அடைந்த போது மணி இரவு 10.30. ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த போது, "இந்த நேரத்தில் ஆட்டோவில் செல்வது பாதுகாப்பாக இருக்குமா...' என்று யோசித்தபடி நின்று கொண்டிரிந்திருக்கிறார். அப்போது என் அருகே வந்த ஆட்டோக்காரர் ஒருவர், விசிட்டிங் கார்டு ஒன்றை தந்து, "மேடம், இதில் என்னோட ஆட்டோ நம்பர், பெயர், மொபைல் நம்பர் எல்லாம் இருக்கு. என்னோட சர்வீஸ் நல்லா இருந்தா, அடுத்தாப்ல கூப்பிடுங்க. எதுவும் தவறா தெரிஞ்சாலும், இதை வச்சி நீங்க நடவடிக்கை எடுக்கலாம்!' என்றார்.அந்த பெண்ணும் ஆட்டோ நம்பரையும், கார்டிலுள்ள நம்பரையும் பார்த்து ஆட்டோவில் ஏறிசென்றிக்கிறார் . அவர் சொன்ன இடத்திலும் பத்திரமாக இறக்கி விட்டார்.எல்லா ஆட்டோக்காரர்களும் இந்த முறையை கடைப்பிடித்தால், பெண்கள் பயமின்றி பயணம் செய்யலாமே!

உண்மையில் புத்திசாலியான ஆட்டோ ஓட்டுனர்தான்..........

(16-11-200 வாரமலரில் வெளியான செய்தி)

Friday, November 14, 2008

அறிவோமா அறிவியல்: இதயம் சில உண்மைகள்!

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.


12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13. ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால் அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.



Thursday, November 13, 2008

அறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்!

1. Madagascan Hissing Cockroach: இவ்வகை கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் நேரடியாக குஞ்சாக பிறக்கும் குணமுடையது. ஒரு சிபூச்சியினங்களில் மட்டுமே இந்த பண்பு உண்டு. பொதுவாக நம் வீடுகளில் காணப்படும் கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது.


2. ஒட்டகங்களின் பால் தயிராக மாறாது.


3. Hamsters: இந்த இன எலிகள் ஒரு நேரத்தில் ஒரு கண்ணை மட்டுமே இமைக்கும்.
4. ஆடு மற்றும் ஆக்டோபஸின் கண்ணின் கருவிழிகள் செவ்வக வடிவில் இருக்கும். பொதுவாக எல்லா விலங்குகளுக்கும் கருவிழி வட்ட வடிவமாகவே இருக்கும்.
5. எல்லா முள்ளம்பன்றிகளும் தண்ணீரில் மிதக்கும் தன்மையுடையது.


6. Copperhead snake: இந்தவகை பாம்புகளின் மணம் (smell) புதிதாக வெட்டிய வெள்ளரிக்காவின் மணத்தை போன்று இருக்கும்.


7. Tasmanian devils: இந்த விலங்கினம் ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள டாஸ்மேனியன் தீவில் காணப்படும். இவை கோபப்படும் பொது அதன் காதுகள் இளம் சிவப்பு நிறமாகிவிடும் (Pinkish red).


8. Iguana: மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த விலங்கினம் தண்ணீருக்கடியில் 25 நிமிடத்திக்கு மேல் இருக்கும் திறனுடையது.


9. பூனைகளுக்கு நான்கு வரிசை whiskers இருக்கும் (மீசை போன்று நீண்டு இருக்கும் ஆனால் மீசை அல்ல - உங்களுக்கு தெரிந்தால் தமிழ் படுத்தவும்) .


10. இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து அன்னபறவைகளும் Sturgeons எனப்படும் மீன்களும் இங்கிலாந்து நாடு ராணிக்கே சொந்தம். அதையும் மீறி அதனை பிடிப்பவர்களுக்கு மிக பெரிய தண்டனை விதிக்கப்படும்.


11. கரடிகளுக்கு 42 பற்கள் உண்டு.


12. மிக சமீபத்தில் உருவாக்கபட்ட நாயினம் Bull Boxer தான். அமெரிக்காவில் 1990-1991 ஆம் ஆண்டு உருவாக்க பட்டது.


13. கன்னித்திரை என அழைக்கப்படும் Hymen மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் மட்டுமே உண்டு.

14. Sea wasp (Box Jelly Fish) எனப்படும் ஜெல்லி மீன்கள் சுமார் அறை இன்ச் அளவே இருக்கும் இவை மாற்ற ஜெல்லி மீன்களை விட அதிக விஷம் உடையது.


15. நியூசிலாந்து நாட்டில் காணப்படும் கிவி (Kiwi) இடும் முட்டைகள்தான் உலகிலே மிக பெரியாது அவற்றின் உருவத்துடன் ஒப்பிடும்போது.


Wednesday, November 12, 2008

அறிவோமா அறிவியல்: மூளை ஒரு அதிசயம்!


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். ஆல்கஹால் நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
ஒரு நியூரான் செல்

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.


4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்.
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள். அறுவை சிகிட்சை நடப்பதை காண இங்கே சொடுக்கவும்.
(இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). வெண்ணை வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.


12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்.

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.


14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.


நல்லா ப(அ )டிக்கிறாங்கோ?

(நன்றி தினமலர்)

(நன்றி தினத்தந்தி)
வாழ்க மாணவர் சமுதாயம்......
இவர்கள் நாட்டின் வருங்கால தூண்களாம்......
கலாம் கண்ட கனவு கண்டிப்பா நனவாகிவிடும்....




Tuesday, November 11, 2008

அறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்!

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்புணியை கூட ஜீரணிக்க முடியும்.
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.


4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.


5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.


6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.


9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)


10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.


12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.


14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.



Monday, November 10, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்! (Part-3)

1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் "ஆடம் ஆப்பிள்" அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.
2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.
3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.

4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.

5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் "இதயம் கூடத்தான்".

6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.

7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .

9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.

10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.

11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.


12. நம் உடலில் மிக அதிகமான உணர்ச்சியுள்ள நரம்பு முடிச்சிகள் இருபது நமது முதுகு தண்டு வடத்தில்தான் (spine). 13. வாழ்நாளில் நமது உடலில் இருந்து உதிரும் தோலின் எடை சுமார் 18 கிலோ வரை இருக்கும்.

14. நமது இதயத்தில் உருவாகும் pressure இரத்தத்தை சுமார் 30 அடிகள் வரை சிதறி அடிக்கும் (squirt) திறனுடையது.

15. நமது உடலில் தாடி முடித்தான் மிக வேகமாக வளரும் தன்மையுடையது. வாழ்நாள் முழுவதும் நாம் தாடியை வளர்த்தால் சுமார் 30 அடிகள் வரை வளரும்.

Sunday, November 9, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள் (Part-2)!

1. நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும் உணவு நமது வயிற்றிக்குள் செல்லும்.

2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான
ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.

3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.


4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்
றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும். 6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.

7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்
கள்.


8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.

9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.

10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு
அணுக்கள் புதிதாக உருவாகிறது.


11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.

12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.

13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.


14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.

15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.

Saturday, November 8, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

1. நமது நடு விரலில் நகம் வேகமாகவும் கட்டைவிரலில் மெதுவாகவும் வளரும்.

2. பெண்களின் மாதவிலக்கின் போது கைகளின் நடுவிரலில் உணர்ச்சி குறைவாக இருக்கும்.

3. நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது.


4. நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.


5. நமது உடலில் அலர்ஜியை உண்டுபண்ணும் முக்கிய உணவு பொருள்கள்: பால், முட்டை, கோதுமை, நிலக்கடலை, சோயா, பருப்பு வகைகள், மற்றும் மீன்கள்.

6. கருவறையில் கரு உருவாகி 11 வாரங்கள் ஆனதும் குழந்தை கொட்டாவி (yawn) விட ஆரம்பிக்கும்.

7. நமது காதின் வளர்ச்சி வருடத்திற்கு 0.01 இன்ச் வளரும்.

8. புட்டிபால் குடித்த குழந்தையைவிட பொதுவாக தாய்பால் குடிக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாய் மாறியபின் ஒல்லியாக இருக்கும்.

9. நமது முகத்தில் 60 தசைகள் உள்ளன நாம் சிரிக்கும் போது 5 முதல் 55 தசைகள் வேலை செய்கின்றன.

10. நமது வயற்றினுள் (colon) 400 வகையான பாக்டிரியாக்கள் வாழ்கின்றன.



11. நமது வாயில் உருவாகும் எச்சிலின் கொதிநிலை நீரை விட நான்கு மடங்கு அதிகம். ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 5000 லிட்டர் எச்சில் உற்பத்தியாகிறது.

12. நாம் ஒவ்வொரு பத்து வினாடியும் சுமார் ஒரு லிட்டர் வாயுவை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம்.

13. ஆண்களை விட பெண்களுக்கு நாவில் சுவைமொட்டுக்கள் அதிகம்.



14. மனிதர்கள் முப்பது வயதிற்கு பிறகு வளர்ச்சி குறைந்து உடல் சுருங்க ஆரம்பிக்கிறது.

15. நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.



16. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரியாக ஒரு இரவில் ஏழு கனவுகள் வரும்.

17. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.

18. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 15 முறை சிரிக்கிறான்.

19. நமது உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் நம் கால்களிலும் கைகளிலும் உள்ளது.

20. நாம் பிறக்கும் போது நிறகுருடாகதான் (color blindness) இருப்போம்.

.....................................................................தொடரும்

Friday, November 7, 2008

உலகின் மிக நீளமான பாலங்கள்!
10: Seven Mile Bridge: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இந்த பாலம் கல்ப் ஆப் மெக்சிகோ வையும் புளோரிடா வளைகுடாவையும் இணைக்கின்றது. இந்த பாலம் கட்டும் பொழுது (1982-ல்) இதுதான் உலகின் மிக பெரியதாக இருந்தது. இதன் நீளம் சுமார் 10 கிலோமீட்டர்கள்.


9.
San Mateo-Hayward Bridge: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்த பாலம் சான் பிரான்சிஸ்கோ தீபகற்பத்தையும் ஒக்லாந்தையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 11.5 கிலோமீட்டர்கள்.


8. Confederation Bridge: பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் கனடாவின் நியூ ப்ருன்ச்விச்கையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 12.9 கிலோமீட்டர்கள். 1997 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


7. Rio-Niteroi Bridge: பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவையும் நிடேரோய்யையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 13.3 கிலோமீட்டர்கள். 1974 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


6. Penang Bridge: பினாங்கு தீவையும் மலேசியாவையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 13.5 கிலோமீட்டர்கள். 1985 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


5. Vasco da Gama Bridge: போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் நகரின் தகுஸ் நதியின் மேல் கட்டபட்டுள்ளது. ஐரோப்பாவின் மிக நீளமான பாலம் இதுதான். இதன் நீளம் சுமார் 17.2 கிலோமீட்டர்கள்.


4. Chesapeake Bay Bridge: அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணத்தில் உள்ள இந்த பாலம் சுமார் 30 கிலோமீட்டர்கள்.

3. King Fahd Causeway: சவூதி அரேபியாவையும் பகரைனையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 25 கிலோமீட்டர்கள், 1986 ஆம் ஆண்டு திறக்கபட்டது.
2. Donghai Bridge: சீனாவின் சங்காய் நகரையும் கடற்கரை நகர் யாங்க்ஷன் யையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 33 கிலோமீட்டர்கள், 2008 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


1. Lake Pontchartrain Causeway: உலகின் மிக நீளமான பாலம் இதுதான். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள இந்த இரட்டை பாலத்தின் நீளம் சுமார் 38.42 கிலோமீட்டர்கள்.

Thursday, November 6, 2008

அறிவோமா அறிவியல்: பென்குயின் சில வினோதங்கள்!

1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.

2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும். 3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.

4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும்
இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

5. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

6. இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.

7. இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.

8. இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

9. மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.


10. பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சி
ல நேரங்களில் பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்).


11. பொதுவாக இவை இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன் பின் பென் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்). குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.



12. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு (sort of like a daycare) கடலுக்குள் சென்று உணவு தேட ஆர
ம்பிக்கும்.

"daycare"


13. பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.

14. மனிதர்களை போல் நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும், சர்பிங் பண்ணும்....
15. 17 வகையான பென்குயின் இனம் உள்ளது.

பென்குயின் பற்றிய வீடியோ காண இங்கே சொடுக்கவும்.


Wednesday, November 5, 2008

அறிவோமா அறிவியல்: கலப்பின விலங்குகள்!

1.
Wolphin: Bottlenose dolphin க்கும் False killer whale க்கும் இடையே செய்யபட்ட கலப்பினம் தான் இது. இரண்டே இரண்டு இந்த கலப்பின விலங்குகள் ஹவாய் தீவில் உள்ள ஒரு கடல் வாழ் விலங்கின பூங்காவில் உள்ளது. Kekaimalu என்பது தான் இதன் பெயர். bottlenose dolphins க்கு 88 பல்லும் false killer whales க்கு 44 பல்லும் உண்டு. ஆனால் கலப்பின Kekaimalu க்கு 66 பற்கள்.

Bottlenose dolphin

False killer whales

Kekaimalu, The Wolphin

2. Hybrid Pheasant: Golden Phesant க்கும் Lady Amherst’s Pheasant க்கும் இடையே செய்யபட்ட கலப்பினம்.

A Golden Pheasant

A Lady Amherst Pheasant

Hybrid Pheasant

3. Leopon: ஆண் leopard க்கும் பெண் lion க்கும் இடையே செய்யப்பட்ட கலப்பினம். தலை சிங்கம் போன்றும் உடல் சிறுத்தை போன்றும் இருக்கும் இவை ஜப்பானில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் உள்ளது (Koshien Hanshin Park, Nishinomiya, Japan).

4. Zebroid: வரிகுதிரைக்கும் மற்றும் அதே இனத்தை சார்ந்த சில விலங்கினங்களுக்கும் இடையே உருவாக்க பட்ட கலபினம்.

Zores: வரிகுதிரைக்கும் குதிரைக்கும் இடையே உருவான கலப்பி
னம்.


Zonkey: வரிகுதிரைக்கும் கழுதைக்கும் இடையே உருவான கலப்பினம்.

Zony: வரிகுதிரைக்கும் Pony இன குதிரைக்கும் இடையே உருவான கலப்பினம்.5. Iron Age Pig: வீட்டில் வளர்க்கப்படும் பன்றிக்கும் (Domestic Tamworth) காட்டு பன்றிக்கும் (wild boar) இடையே உருவான கலப்பினம். இவை இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கபடுவதாகும்.6. Wolf Dog: ஓநாய்க்கும் சாதரண நாய்க்கும் இடையே உருவான கலப்பினம்தான். இவை சிலநேரம் ஓநாய் போலவும் சில நேரம் நாய் போலவும் நடந்துகொள்ளும்.
7. Cama: ஒட்டகத்திற்கும் தென் அமெரிக்காவில் காணப்படும் லாமா எனப்படும் விலங்கிற்கும் டையே உருவான கலப்பினம்தான். இவை செயற்கை இனபெருக்கம் மூலம் உருவாக்க பட்டது. என்னென்றால் ஒட்டாகம் மிக உயரமானது லாமா உயரத்தில் சிறியது.

பெற்றோர் ஒட்டகமும் லாமாவும் இரண்டு மாத குட்டி Cama

இரண்டு வயது குட்டி Cama

Tuesday, November 4, 2008

அறிவோமா அறிவியல்: உலகின் அதிபயங்கர விஷமுடைய விலங்கினங்கள்!

1. Dart Frog: கொலம்பியா நாட்டு காடுகளில் காணப்படும் இந்த தவளையின் விஷம்தான் உலகின் அதிபயங்கர விஷமாகும். இத்தனை உண்ணும் விலங்கினகள் உடனே இறந்துவிடும். ஒரு தவளையில் இருந்து பெறப்படும் விஷத்தின் (1900 micrograms) மூலம் 1500 மனிதர்களை கொல்லமுடியும். இந்த விசத்தின் மூலம் பல மருந்துகள் கூட தயாரிக்கப்படுகிறது.

2. Black Mamba: உலகின் அதிபயங்கர விஷமுடைய பாம்பு இதுதான். ஒரு விநாடி போதும் உயிர் பிரிய. இரண்டு துளி விஷம் போதும் ஒரு மனிதனை கொல்ல.


3. Reef Stonefish: இந்த மீனின் பின்புறத்தில் உள்ள முள்ளின் மூலமாக விஷத்தினை செலுத்தும். இந்த மீனின் விஷம் அதிக வலியை உண்டாக்கி பின் உயிரை வாங்கிவிடும்.

4. Blue Ringed Octopus: முதலில் எதிரியயை பயமுறுத்த உடலில் இருந்து நீல நிற திரவத்தை வெளியற்றும். அதன் பிறகுதான் கடித்து விஷத்தை உடலினுள் செலுத்தும்.... அப்புறம் என்ன கண்டிப்பாக உயிர் போய்விடும்.


4. Box Jelly Fish: ஒரு மனிதனை 15 நிமிடங்களில் கொன்றுவிடும்.


5. Inland Taipan Snake: 2.5 மீட்டர் நீளம் வளரும் இந்த பாம்பின் விஷம் மூளையை தாக்கும் விஷமாகும். ஒரே ஒரு கடி போதும் மனிதனின் உயிரை எடுக்க.
அறிவோமா அறிவியல்: உலகின் அதிக விஷமுடைய பறவைகள்!

உலகின் மிக விஷமுடைய உயிரினம் சில மீன்களும் சில பாம்புகளும் என்பது நமக்கு தெரியும். ஆனால் சில பறவைகள் கூட அதிக விசமுடையது என்பதும் அவற்றை உண்பதாலும் தொடுவதாலும் விஷ தன்மை ஏற்படும் என்பதை இப்பதிவில் காண்போம்.

1.Hooded Pitohui (Pitohui dichrous): இந்த இன பறவைகள் நியூ கினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இதன் தோலிலும் இறகிலும் மூளையை தாக்கும் விஷம் உள்ளது. இந்த பண்பு எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துகொள்வதர்க்கே. இந்த இனத்தில் ஆறு வகையான பறவைகள் உள்ளன அனைத்தும் விசமுடயதே. உலகின் மிக அதிக விஷமுடைய பறவை இதுதான். இந்த விஷத்தினை சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. பொதுவாக உணவின் மூலமோ அல்லது பிற விஷ உயிரினங்களின் மூலமோ பெற்றுக்கொள்ளும்.




2.Variable Pitohui: இந்த பறவைகள் இந்தோனிசியாவிலும், பபுவா நியூ கினியா தீவுகளிலும் காணப்படும்.


3.Blue-capped Ifrita: இதுவும் நியூ கினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இவை விஷத்தினை உணவின் மூலமாகவும் Choresine beetles என்னும் பூச்சியின் உடலில் இருந்தும் எடுத்துகொள்கிறது.
4. Rufous or Little Shrike-thrush: பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் தெரியும் இந்த பறவையும் அதிக விசமுடயதாகும். இவை ஆஸ்ட்ரேலியா, இந்தோனிசியா மற்றும் பபுவா நியூ கினியா தீவுகளிலும் காணப்படும். இந்த பறவையின் விஷம் தென் அமெரிக்கா காடுகளில் காணப்படும் விஷ தவளைகளின் விஷத்தை ஒத்திருக்கும்.




Monday, November 3, 2008

அறிவோமா அறிவியல்: யானை சில வியப்பூட்டும் செய்திகள்!

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.
3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.


5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.
6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.


8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.


9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.


15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.


16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. இரண்டாம் உலக போரின்போது போடபட்ட முதல் குண்டில் இறந்தது ஒரு யானை மட்டுமே (பெர்லின் விலங்கியல் பூங்காவில்)

19. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

Saturday, November 1, 2008

அறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பாலூட்டிகள்!

உலகில் ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும், மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இது விலங்கின ஆர்வலர்களையும் சுற்றுப்புற சூழ்நிலை ஆராய்ச்சியாளர்களையும் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளது. சிலவருடங்களாக சர்வதேச சமூகம் விழித்துக்கொண்டு பல சட்டங்களும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ததினால் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது. இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

அழியும் தருவாயில் உள்ள நம் பாலூட்டி இனங்களை பற்றி நாம் காண்போம்.

1. Baiji or Yangtze River Dolphin: சீனாவில் உள்ள Yangtze என்னும் ஆற்றில்
காணப்படும் இந்த நன்னீர் வாழ் டால்பின்கள் இன்று உலகில் பத்து அல்லது அதைவிட குறைவாகே உள்ளது. 1950 யில் இந்த இனத்தின் எண்ணிக்கை 6000....இன்று?(தற்பொழுது அழிந்து விட்டதாகவே கருதப்படுகிறது)

2. Vancouver Island Marmot: கனடா நாட்டில் காணப்படும் இந்த அழகான விலங்கினம் தற்பொழுது அழியும்தருவாயில் உள்ளது. 1997 ஆம் ஆண்டு மிக குறைவாகவே காணபட்ட இந்த இனம் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் தற்பொழுது சுமார் 200 விலங்குகள் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.


(இதன் முகத்தை பாருங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னால் உருவான இந்த இனம் இன்று அழியும் தருவாயில்.....எல்லாவற்றிக்கும் மனிதனின் சுயநலமே.....)

3. Seychelles Sheath-tailed Bat: செஷல்ஸ் தீவுகளில் காணப்படும் இந்த வவ்வால் இனம் இன்று சுமார் 50-100 தான் உள்ளது. இந்த இனம் எதனால் அளிக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

4. Javan Rhinoceros: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணபட்ட இந்த காண்டாமிருக இனம் தற்பொழுது சுமார் 60 தான் உள்ளது. இது அழிவதற்கு முக்கிய காரணம் இதன் கொம்புகள் மருத்துவ குணம் உடையது என்ற மூட நம்பிக்கையால் வேட்டையாடபடுவதால் தான்.
5. Hispid hare: இந்தியாவிலும் நேபாளத்திலும் பரவலாக காணபட்ட இந்த முயலினம் தற்பொழுது 110 தான் உள்ளதாக கணக்கிட பட்டுள்ளது. இவை பொதுவாக வேட்டையாடபட்டதினால் அழிந்துகொண்டிருக்கும் இனமாகும். இன்னொரு காரணம் காடுகள் அழிக்கபடுவதினால்.

(பொன்னுசாமியிலும், தலைப்பாகட்டியிலும் முயல் கறி சாப்பிடும் போது கவனிக்க....)

6. Northern hairy-nosed Wombat: தற்பொழுது சுமார் 113 தான் உயிருடன் இருப்பதாக
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்திலும் கணக்கிடபட்டுள்ளது. கால்நடை பண்ணைகள் அமைத்ததின் காரணமாக இவ்வினம் அழிந்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.


7. Tamaraw or Dwarf Water Buffalo: பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே காணப்படும் இந்த எருமைகளின் எண்ணிக்கை சுமார் 30 -200 வரை இருக்கலாம். வேட்டை, காடுகள் அழிப்பு மற்றும் பலவகையான நோயினால் அழிந்துகொண்டிருக்கிறது.
8. Iberian Lynx: ஐரோப்பாவில் அழிந்து கொண்டிருக்கும் மிக முக்கியாமான இனம் இந்த பூனையினம் தான். தற்பொழுது 120 விலங்குகள் தான் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ளதாக கணக்கிட பட்டுள்ளது. வேட்டையாடுதல், உணவு பற்றாகுறை போன்றவற்றால் அழிந்துவருவதாக சொல்லப்படுகிறது. (இதன் முக்கிய உணவு முயல்கள்தான், முயலைத்தான் மனிதன் விடுவதில்லையே)


9. Red Wolf: அமெரிக்கா மற்றும் கனடா காடுகளில் காணப்படும் சிவப்பு ஓநாய்கள் தற்பொழுது சுமார் 150 தான் உள்ளது. இவை வேட்டை மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் அழிந்துவருகிறது.


10. Dwarf blue sheep: சீனாவில் காணப்படும் இவ்வகை மலையாடுகள் சுமார 200 தான் உள்ளதாக கணகிடபட்டுள்ளது. அதிக வேட்டையாடுதல், மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் அழிந்துவருகிறது.

இன்னும் அதிர்ச்சியான விஷயங்களுடன் வரும்..........




அறிவோமா அறிவியல்: உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!

10. Kjellfossen falls: நார்வே நாட்டின் இந்த நீர்வீழ்ச்சி உலகின் பத்தாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் சுமார் 550 மீட்டர்கள்.9. Sutherland falls: நியுசிலாந்த்து நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் ஒன்பதாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும் இதன் உயரம் 580 மீட்டர்கள்.
8. Cuquenan Falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் எட்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் 670 மீட்டர்கள்.
7. Yssestrengene falls: நார்வே நாட்டின் இந்த நீர்வீழ்ச்சி உலகின் ஏழாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் சுமார் 680 மீட்டர்கள்.6. Ostre Mardola Foss falls: நார்வே நாட்டின் மற்றொரு மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் ஆறாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம சுமார் 700 மீட்டர்கள்.
5. Yosemite falls: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகின் 5வது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 739 மீட்டர்கள்.


4. Mongefossen falls: நார்வே நாட்டின் மற்றொரு மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் நான்காவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் 773 மீட்டர்கள்.

3. Utigord falls: நார்வே நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகின் மூன்றாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 787 மீட்டர்கள்.

2. Tugela falls: தென் ஆப்ப்ரிக்காவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 947 மீட்டர்கள்.
1. Angel falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் மிக உயரமானதாகும். இதன் உயரம் 979 மீட்டர்கள் அத