Monday, November 3, 2008

அறிவோமா அறிவியல்: யானை சில வியப்பூட்டும் செய்திகள்!

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.
3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.


5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.
6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.


8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.


9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.


15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.


16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. இரண்டாம் உலக போரின்போது போடபட்ட முதல் குண்டில் இறந்தது ஒரு யானை மட்டுமே (பெர்லின் விலங்கியல் பூங்காவில்)

19. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

6 comments:

Vadielan R said...

நண்பரே யானையை பற்றி தெரியாத செய்திகள் நன்றாக இருந்தது.

Vadielan R said...

அற்புதமான செய்திகள் யானை பற்றி தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டோம்

Dr. சாரதி said...

வடிவேலன் .ஆர் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Elephants are such a factinating animal.
Man learnt the form of family living only from elephants. If a baby elephant is orphaned , it is taken care by the other elephants in that group.
the baby elephant is fed by more than one female elephants in the group.
Elephant can hear ultra sonic wavelengths and communicate to other groups which are at long distances.
elephants definitely has a good memory.
elephants do not like the smell of liquor or arrack.
So if the mahout is drunk , it will not obey his orders.
this is the reason, elephants trunt violent and killed the mahouts in kerala.

Mahout can beat the elephants, but if he scolds it cannot bear it.
It is more sentimental

If you watch elephant you will never get bored.
just beacuse man had learnt life and his evolutin had grown up with elephants

Ele

Srigurusankar said...

anna How can we download the videos? plz

Dr. சாரதி said...

Anonymous மற்றும் Srigurusankar தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats